தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, June 28, 2010

வண்ண விளக்குகளின் ரகசியம்


Light
ஒளி உமிழும் டையோடுகள் (LED) என்பவை மின்னோட்டம் பாயும்போது ஒளியை உமிழும் தன்மை உடையவை. இவை குறைமின்கடத்திகளால் ஆனவை. மின்னியல் சாதனங்களில் இந்த விளக்குகள் நீலநிற அல்லது பச்சைநிற ஒளியை உமிழ்கின்றன. பாஸ்பரஸ் பூச்சு பூசப்பட்டால் வெண்மை நிற ஒளியைத்தரக்கூடியவை. இந்த விளக்குகளில் காலியம் நைட்ரைடு (GaN) என்னும் வேதிப்பொருள் பயன்படுகிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்புதான் காலியம் நைட்ரைடு உருவாக்கப்பட்டது.

இரண்டு அங்குல தடிமனுள்ள விலையுயர்ந்த நீலக்கல்லில் காலியம் நைட்ரைடு சேர்மத்தை பொதிந்து வளர்க்கும் தொழில்நுட்பம் இதுவரை நடைமுறையில் இருந்தது. இதனால் இந்த விளக்குகளின் விலை மிகவும் அதிகம். ஆனால் புதிய கண்டுபிடிப்பின்படி ஆறு அங்குல தடிமனுள்ள சிலிகான் தட்டில் பத்துமடங்கு காலியம் நைட்ரைடு சேர்மத்தை வளர்க்க முடியும். சிலிகான் விலைகுறைவான தனிமம் என்பதால் உற்பத்தி செலவு பத்தில் ஒரு பங்காக குறையும் வாய்ப்பு இருக்கிறது.

ஒளிஉமிழும் டையோடுகளை குறைந்தசெலவில் தயாரிக்கும் தொழில்நுட்பம் தற்போது கண்டறியப்பட்டுள்ளதால் இன்னும் ஐந்தாண்டுகளில் விளக்குகளுக்கான மின்கட்டணத்தில் முக்கால்பங்கு சேமிக்கலாம் என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் காலின் ஹம்ப்ரிஸ்.

ஒளி உமிழும் டையோடுகளின் விலை பத்தில் ஒரு பங்காக குறையும்போது ஒளி உமிழும் டையோடுகளைப் பயன்படுத்திய விளக்குகளின் விற்பனை நிச்சயமாக அதிகரிக்கும். விளைவாக, நமது மின்கட்டணத்தில் முக்கால் பங்கு குறைந்துபோகும் என்கிறார் காலின் ஹம்ப்ரிஸ்.

அதாவது மின்சார உபயோகத்தில் நான்கில் ஒருபங்கு சிக்கனம் ஏற்படுமாம். இப்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களைக்கூட மூடவேண்டி வருமாம். நம்முடைய மின்வெட்டு அமைச்சருக்கு இது நிச்சயம் நல்ல செய்திதான். ஆனால் இந்தக்கனவு நனவாவதற்கு அவர் ஐந்து வருடங்கள் காத்திருக்கவேண்டுமே! யாருக்கு அந்த யோகம் அடிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.

காலியம் நைட்ரைடு சேர்மத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஒரு ஒளி உமிழும் டையோடு விளக்கு ஒரு லட்சம் மணிநேரத்திற்கு எரியக்கூடியது. அதாவது 60 ஆண்டுகள் வரை தொடர்ந்து அந்த விளக்கு எரியும். இவற்றில் பாதரசம் இல்லை. எனவே சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்தும் சிக்கலும் இல்லை. மேலும் காலியம் நைட்ரைடு ஒளி உமிழும் விளக்குகளை தேவைப்படும்போது பிரகாசமாகவோ, மங்கலாகவோ எரியச்செய்துகொள்ளலாம்.



Read more: http://therinjikko.blogspot.com/2009/05/blog-post_9593.html#ixzz0sCjJ4MwM

நிலாவில் குடியேறுவதில் என்ன சிக்கல்?

நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.



ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.



விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களை ஒருமுறை சந்திரனுக்குக் கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்



காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.



இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?



முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.



சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.



முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.



தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.



உற்பத்தி செய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.



ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப் பற்றி சிந்திக்கலாம்.



செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளி நிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத் திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து செலவினங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.



அதனால்தான் தாமதம்.
Loading...
[*] [/*]

சோனியால் புளு ரே மார்க்கெட் உயரும்

சிடி, டிவிடிக்களை அடுத்து, இனி நம்மிடம் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது புளு ரே டிஸ்க்குகளே. புளு ரே ஆடியோ விசுவல் சாதனங்களுக்கு இந்தியாவில் சரியான மார்க்கட்டைத் தரும் வகையில், சோனி இந்தியா நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சாதனங்களில் பல மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் தொடக்க விலை ரூ.9,990 ஆக இருக்கும். இந்த சாதனங்களுடன் புளு ரே டிஸ்க்கில் 500க்கும் மேற்பட்ட மூவிக்களையும் சோனி தருகிறது.

 

புளு ரே டிஸ்க் பிளேயர்ஸ், ஹோம் தியேட்டர் சிஸ்டம்ஸ், பிளே ஸ்டேஷன் 3 மற்றும் VAIO ஆகியவை இந்த வரிசையில் நமக்குக் கிடைக்க இருக்கின்றன. இவை, ஹை டெபனிஷன் படங்களையும், தெளிவான ஆடியோக்களையும் தரும். மேலும் இவற்றைப் பயன்படுத்தி இன்டர்நெட் இணைப்பினையும் பெறலாம். எனவே படங்களைப் பார்த்து ரசிக்கும்போதும், இசையைக் கேட்டு பரவசப்படும் போதும், கேம்ஸ் விளையாடி மகிழும் போதும் மற்றும் இவை அனைத்தையும் ரெகார்ட் செய்து இயக்கிப் பார்க்கும் போதும், நமக்கு புளு ரே தொழில் நுட்பம் உடன் இருக்கும்.

அதன் மூலம் ஹை டெபனிஷன் உலகம் நமக்குக் கிடைக்கும். அடுத்த நிதி ஆண்டிற்குள், புளு ரே சாதனங்கள் மார்க்கட்டில் 60% பங்கினை, சோனி இந்தியா நிறுவனம் கைப் பற்ற முயற்சிகளை எடுக்கிறது. இவற்றை விற்பனை செய்திடும் 4,000 மையங்களை, இந்தியா முழுவதும் திறக்க இருக்கிறது.

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது.



அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா! நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.

முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.

மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.

அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.

பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.

அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

இலங்கையில் தொகுக்கப்பட்ட அகராதிகள்


6/11/2010

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையிலே பல அகராதிகள் தொகுக்கப்பட்டன. இதற்குக் காரணம் புரட்டஸ்தாந்து மதப்பிரசாரகர்களின் வருகையாகும். தமிழைக் கற்றுக் கொள்வதற்கு அகராதிகள் அதிகம் தேவைப் பட்டன. செய்யுள் வழக்கை மட்டுமன்றி பேச்சுத் தமிழையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை பிறநாட்டுத் தொண்டர்களுக்கு இருந்தது.

அகராதியின் வளர்ச்சியை மூன்று நிலைகளிற் காணலாம். முதலில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலேயே பொருள் கூறும் அகராதி. அடுத்து ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பொருள் கூறும் அகராதி. இறுதியாக தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் கூறும் அகராதி.

மேனாட்டவரின் அகராதிப் பணி இலங்கைத் தமிழ் அறிஞர்களையும் இத்துறையில ஆர்வம் கொள்ளச் செய்தது. தமது சொந்த முயற்சியால் அகராதிகளைத் தொகுத்து தமிழ் கற்கும் மாணவர்களுக்கு துணைபுரிந்தனர்.

அருஞ்சொல் அகராதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டன. டாக்டர். எஸ். எவ். கிறீன் என்னும் அமெரிக்க சமயத் தொண்டர் முதன்முதலாக ஆங்கில மருத்துவப் பதங்களை நிரைப்படுத்தி விளக்கமளித்தார். பின்னர் பல்வேறு துறைகளுக்கு அருஞ்சொல் அகராதிகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அகராதிக் கலை யாழ்ப்பாணச் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கியது என்பதனையும் இன்றுவரை அது வளர்ந்து வருகின்றது என்பதனையும் விளக்குவதாக இவ்வாய்வுரை அமையும்.
.

தமிழ் மருத்துவமும் சித்தர்களும்


6/11/2010

தமிழ் மருத்துவத்தில் முக்கியமாக சித்தர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வடமொழியில் இருந்த மருத்துவக்கருத்துக்களை தமிழில் மாற்றியமைப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாக மாறுவதற்கு காரணமான சித்தர்களை சித்தமருத்துவ நூல்கள் பட்டியலிடுகின்றன. இந்நூல்களில் சில சித்தர்கள் விடுபட்டும், சிலர் சேர்க்கப்பட்டும் மொத்தமாக பதினெண் சித்தர்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பதினெண்சித்தர் நாடிசாஸ்திரம், பதினெண்சித்தர் ஞானக்கோவை, பதினெண்சித்தர் மூலிகை அகராதி என்பன சுட்டிக்காட்டுகின்றன. சித்தர்கள் குரு சீட பரம்பரையாக தமிழ் மருத்துவத்தை மனவழியில் போதித்தனர். இதில் பாடல்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் சித்தமருத்துவர்கள், பண்டிதர்களால் பனையோலையில் எழுதப்பட்டு தற்போது நூலுருவிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சித்தர்கள் அரசஆதரவையோ அல்லது தழிழ்ச்சங்களின் ஆதரவையோ பெறாமல் தமது ஆத்மீக பலத்தை நம்பி மனித சமுதாயத்துடன் இணைந்து வாழாமல் காட்டில், மலைக்குகைகளில் வாழ்ந்து தமிழ் மருத்துவத்தை வளர்தெடுத்தனர். பதினெண்சித்தர்களில் அகத்தியர் முருகனிடம் தமிழ் கற்றவர் என அறியப்படுகிறது. அகத்தியர் 21000, அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயுர்வேதம், அகத்தியர் நயனவிதி, அகத்தியர் குணபாடம், அகத்தியர் இரத்தினச்சுருக்கம் -300, அகத்தியர் வைத்தியகாவியம் 1200 எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அகத்தியரின் வைத்தியமுறைகளைப் பரப்பியவர் புலத்தியர் சித்தர் எனவும் அவர் யாழ்ப்பாணத்தில் சமாதியானார் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் பரம்பரை வைத்தியர்கள் தமது மருத்துவ மூலநூலாக அகத்தியர் மருத்துவ காவியங்களை இன்றும் பயன்படுத்துகிறது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

போகர் எனும் சித்தர் முருகப்பெருமானின் அருள் பெற்றவர். போகர்-700,போகர் நிகண்டு, போகர் சரக்கு வைப்பு- 800 எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இரசவாதக்கலையில் வல்லுனரான இவர் பழனியில் பாடாணங்களைக் கொண்டு பழனிசாமியை பிரதி~;டை செய்வித்தார். இலங்கையில் கதிர்காமத்திலும் முருகனுக்கு இயந்திரம் செய்வித்தார்.

இதன் பலனான இலங்கையில் கதிர்காமம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆகிய இடங்களிலும் ஈழத்துச் சித்தர் பரம்பரை உருவாக வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தேரடியில் செல்லப்பாவுசுவாமிகள், யோகசுவாமிகள் என்போhரின் அருள் பாலிப்பால் யாழ்ப்பாணத்து தமிழ்மருத்துவம் சிறப்பிடம் பெறுகிறது. யோகசுவாமிகள் அருள் வாக்குப்பெற்று கந்தர்மடம், வண்ணார்பண்ணை, கஸ்தூரியார் வீதியில் பல சித்த வைத்தியர்கள் பிரபல்யமாக வைத்திய சிகிச்சை புரிந்தார்கள். இதில் கஸ்தூரி முத்துக்குமாரு வைத்திய பரம்பரை முக்கியமானதாகும்.

இன்றும் நல்லூர் கோவிலை அண்டிய பகுதியில் குடையிற்சுவாமிகள் வைத்திய நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரத்தில் சித்த மருத்துவக்கருத்துக்கள் உடலின் தோற்றம், கருவுற்பத்தி, ஆரோக்கிய வாழ்வு என தமிழ் மருத்துவகருத்துக்களை எழுதியுள்ளார். இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டு கொள்ள முடியாத மருத்துவ சிந்தனைகளைக் கூறியிருப்பது அவரின் மெய்ஞான, விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இராமதேவர் அரேபியா சென்று தமிழ் மருத்துவத்தைப் பரப்பியதால் அதிலின்று மேலைத்தேய மருத்துவம் வளர்வதற்கு அடிகோலினார். யூகி முனிவர் ஒரு மருத்துவ மேதையாவார் யூகிசிந்தாமணி, யூகிவாதகாவியம் என்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலிப்பாணி என்பவர் புலிப்பாணி 500, புலிப்பாணி பலதிரட்டு என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

முடிவாக சித்தர்கள் சமஸ்கிருத மொழியில் இருந்த வைத்திய காவியங்களை தமிழில் எழுதுவித்ததார்கள். வைத்தியத்தில் மருந்துகளை கண்டுபிடித்து நோய்ப்பிணி தீர்ப்பதில் வல்லுனர்களாக விளங்கினார்கள். பாடல்களாக ஆரோக்கிய வாழ்விற்கு நோய்அணுகாவிதிகளை பாடியுள்ளார்கள். இந்தியா,இலங்கை, ஆபிரிக்கா, சீனா, எகிப்து,அரேபியா நாடுகளில் தமிழ்மருத்துவத்தை பரப்பியுள்ளார்கள். குருசிஷ்ய முறையினூடாக சிஷ்யர்களுக்கு மருத்துவத்தைப்புகட்டி மருத்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். மருத்துவ முறையில் காயகற்பமுறைகளை கண்டு பிடித்து நரை,மூப்பு,பிணி வராது பாதுகாப்பதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். முடிவாக தமிழ்மருத்துவ வளர்ச்சியில் சித்தர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள்.

விளக்கச்சொல்:- காயகற்பம், நரை, மூப்பு, பிணி

மருத்துவர்:- மிதிலைச்செல்வி -ஸ்ரீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1, சித்த மருத்துவப்பிரிவு, திருகோணமலைவளாகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்., இலங்கை.

தமிழ் மருத்துவமும் சித்தர்களும்


6/11/2010

தமிழ் மருத்துவத்தில் முக்கியமாக சித்தர்கள் கருதப்படுகிறார்கள். இவர்கள் வடமொழியில் இருந்த மருத்துவக்கருத்துக்களை தமிழில் மாற்றியமைப்பதில் வல்லமை பெற்றிருந்தனர். சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமாக மாறுவதற்கு காரணமான சித்தர்களை சித்தமருத்துவ நூல்கள் பட்டியலிடுகின்றன. இந்நூல்களில் சில சித்தர்கள் விடுபட்டும், சிலர் சேர்க்கப்பட்டும் மொத்தமாக பதினெண் சித்தர்கள் என வகைப்படுத்தியிருக்கிறார்கள். இதனை பதினெண்சித்தர் நாடிசாஸ்திரம், பதினெண்சித்தர் ஞானக்கோவை, பதினெண்சித்தர் மூலிகை அகராதி என்பன சுட்டிக்காட்டுகின்றன. சித்தர்கள் குரு சீட பரம்பரையாக தமிழ் மருத்துவத்தை மனவழியில் போதித்தனர். இதில் பாடல்களே கூடுதலாகக் காணப்படுகின்றன.

பிற்காலத்தில் சித்தமருத்துவர்கள், பண்டிதர்களால் பனையோலையில் எழுதப்பட்டு தற்போது நூலுருவிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் மாற்றப்பட்டு வருகின்றன. இச்சித்தர்கள் அரசஆதரவையோ அல்லது தழிழ்ச்சங்களின் ஆதரவையோ பெறாமல் தமது ஆத்மீக பலத்தை நம்பி மனித சமுதாயத்துடன் இணைந்து வாழாமல் காட்டில், மலைக்குகைகளில் வாழ்ந்து தமிழ் மருத்துவத்தை வளர்தெடுத்தனர். பதினெண்சித்தர்களில் அகத்தியர் முருகனிடம் தமிழ் கற்றவர் என அறியப்படுகிறது. அகத்தியர் 21000, அகத்தியர் பரிபூரணம், அகத்தியர் ஆயுர்வேதம், அகத்தியர் நயனவிதி, அகத்தியர் குணபாடம், அகத்தியர் இரத்தினச்சுருக்கம் -300, அகத்தியர் வைத்தியகாவியம் 1200 எனப் பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். இலங்கையில் அகத்தியரின் வைத்தியமுறைகளைப் பரப்பியவர் புலத்தியர் சித்தர் எனவும் அவர் யாழ்ப்பாணத்தில் சமாதியானார் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய இடங்களில் தமிழ் பரம்பரை வைத்தியர்கள் தமது மருத்துவ மூலநூலாக அகத்தியர் மருத்துவ காவியங்களை இன்றும் பயன்படுத்துகிறது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

போகர் எனும் சித்தர் முருகப்பெருமானின் அருள் பெற்றவர். போகர்-700,போகர் நிகண்டு, போகர் சரக்கு வைப்பு- 800 எனப் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இரசவாதக்கலையில் வல்லுனரான இவர் பழனியில் பாடாணங்களைக் கொண்டு பழனிசாமியை பிரதி~;டை செய்வித்தார். இலங்கையில் கதிர்காமத்திலும் முருகனுக்கு இயந்திரம் செய்வித்தார்.

இதன் பலனான இலங்கையில் கதிர்காமம், நல்லூர், செல்வச்சந்நிதி ஆகிய இடங்களிலும் ஈழத்துச் சித்தர் பரம்பரை உருவாக வழிவகுத்தது. யாழ்ப்பாணம் நல்லூர் தேரடியில் செல்லப்பாவுசுவாமிகள், யோகசுவாமிகள் என்போhரின் அருள் பாலிப்பால் யாழ்ப்பாணத்து தமிழ்மருத்துவம் சிறப்பிடம் பெறுகிறது. யோகசுவாமிகள் அருள் வாக்குப்பெற்று கந்தர்மடம், வண்ணார்பண்ணை, கஸ்தூரியார் வீதியில் பல சித்த வைத்தியர்கள் பிரபல்யமாக வைத்திய சிகிச்சை புரிந்தார்கள். இதில் கஸ்தூரி முத்துக்குமாரு வைத்திய பரம்பரை முக்கியமானதாகும்.

இன்றும் நல்லூர் கோவிலை அண்டிய பகுதியில் குடையிற்சுவாமிகள் வைத்திய நிலையம் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திருமூலரால் எழுதப்பட்ட திருமந்திரத்தில் சித்த மருத்துவக்கருத்துக்கள் உடலின் தோற்றம், கருவுற்பத்தி, ஆரோக்கிய வாழ்வு என தமிழ் மருத்துவகருத்துக்களை எழுதியுள்ளார். இன்றும் விஞ்ஞான ஆராய்ச்சியில் கண்டு கொள்ள முடியாத மருத்துவ சிந்தனைகளைக் கூறியிருப்பது அவரின் மெய்ஞான, விஞ்ஞான அறிவின் வளர்ச்சியை கோடிட்டுக் காட்டுகிறது. இராமதேவர் அரேபியா சென்று தமிழ் மருத்துவத்தைப் பரப்பியதால் அதிலின்று மேலைத்தேய மருத்துவம் வளர்வதற்கு அடிகோலினார். யூகி முனிவர் ஒரு மருத்துவ மேதையாவார் யூகிசிந்தாமணி, யூகிவாதகாவியம் என்ற 3000 பாடல்களைப் பாடியுள்ளார். இவ்வாறு புலிப்பாணி என்பவர் புலிப்பாணி 500, புலிப்பாணி பலதிரட்டு என பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார்.

முடிவாக சித்தர்கள் சமஸ்கிருத மொழியில் இருந்த வைத்திய காவியங்களை தமிழில் எழுதுவித்ததார்கள். வைத்தியத்தில் மருந்துகளை கண்டுபிடித்து நோய்ப்பிணி தீர்ப்பதில் வல்லுனர்களாக விளங்கினார்கள். பாடல்களாக ஆரோக்கிய வாழ்விற்கு நோய்அணுகாவிதிகளை பாடியுள்ளார்கள். இந்தியா,இலங்கை, ஆபிரிக்கா, சீனா, எகிப்து,அரேபியா நாடுகளில் தமிழ்மருத்துவத்தை பரப்பியுள்ளார்கள். குருசிஷ்ய முறையினூடாக சிஷ்யர்களுக்கு மருத்துவத்தைப்புகட்டி மருத்துவ வளர்ச்சிக்கு உதவியுள்ளார்கள். மருத்துவ முறையில் காயகற்பமுறைகளை கண்டு பிடித்து நரை,மூப்பு,பிணி வராது பாதுகாப்பதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். முடிவாக தமிழ்மருத்துவ வளர்ச்சியில் சித்தர்கள் பெரும்பங்காற்றியுள்ளார்கள்.

விளக்கச்சொல்:- காயகற்பம், நரை, மூப்பு, பிணி

மருத்துவர்:- மிதிலைச்செல்வி -ஸ்ரீகாந்தன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1, சித்த மருத்துவப்பிரிவு, திருகோணமலைவளாகம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்., இலங்கை.