தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, June 28, 2010

இலங்கையில் தொகுக்கப்பட்ட அகராதிகள்


6/11/2010

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கையிலே பல அகராதிகள் தொகுக்கப்பட்டன. இதற்குக் காரணம் புரட்டஸ்தாந்து மதப்பிரசாரகர்களின் வருகையாகும். தமிழைக் கற்றுக் கொள்வதற்கு அகராதிகள் அதிகம் தேவைப் பட்டன. செய்யுள் வழக்கை மட்டுமன்றி பேச்சுத் தமிழையும் புரிந்துகொள்ள வேண்டிய தேவை பிறநாட்டுத் தொண்டர்களுக்கு இருந்தது.

அகராதியின் வளர்ச்சியை மூன்று நிலைகளிற் காணலாம். முதலில் தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலேயே பொருள் கூறும் அகராதி. அடுத்து ஆங்கிலச் சொற்களுக்கு தமிழில் பொருள் கூறும் அகராதி. இறுதியாக தமிழ்ச் சொற்களுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் கூறும் அகராதி.

மேனாட்டவரின் அகராதிப் பணி இலங்கைத் தமிழ் அறிஞர்களையும் இத்துறையில ஆர்வம் கொள்ளச் செய்தது. தமது சொந்த முயற்சியால் அகராதிகளைத் தொகுத்து தமிழ் கற்கும் மாணவர்களுக்கு துணைபுரிந்தனர்.

அருஞ்சொல் அகராதிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே ஆரம்பமாகிவிட்டன. டாக்டர். எஸ். எவ். கிறீன் என்னும் அமெரிக்க சமயத் தொண்டர் முதன்முதலாக ஆங்கில மருத்துவப் பதங்களை நிரைப்படுத்தி விளக்கமளித்தார். பின்னர் பல்வேறு துறைகளுக்கு அருஞ்சொல் அகராதிகள் தொகுக்கப்பட்டு வருகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அகராதிக் கலை யாழ்ப்பாணச் சமுதாயத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கியது என்பதனையும் இன்றுவரை அது வளர்ந்து வருகின்றது என்பதனையும் விளக்குவதாக இவ்வாய்வுரை அமையும்.
.

No comments:

Post a Comment