தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Monday, June 28, 2010

செம்மொழி மாநாட்டில் காமன்கூத்து கலைஞர்கள்


6/18/2010

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தமிழகத்தின் கோவையில் இடம் பெறுவுள்ள உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 24 ஆம் திகதி இடம் பெறவுள்ள கலாசார நிகழ்வில் மலையகத்தின் நாட்டுக்கூத்தான காமன்கூத்து இடம் பெறவுள்ளது. மலையக மக்கள் கலை அரங்கின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்தக்காமன் கூத்தில் மலையகத்தைச்சேர்ந்த 14 கலைஞர்கள் பங்கு பற்றவுள்ளனர்.

உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாட்டின் ஆய்வரக்கத்தலைவர் பேராசிரியர் கா.சிவத்தம்பியின் ஆலோசனைக்கேற்ப மலையகக்கவிஞர் சு.முரளிதரனின் சிபாரிசுக்கேற்ப மலையகத்தைச்சேர்ந்த ஆசிரியர் பிரான்ஸிஸ் ஹெலனின் நெறியாள்கையில் காமன் கூத்து இந்தச்செம்மொழி மாநாட்டில் மேடையேற்றப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்குபற்றவுள்ளவர்களின் அறிமுகத்தினையும் அவர்களின் இங்கு தொகுதி வழங்குகின்றேன்.

பிரான்ஸிஸ் ஹெலன்

நோர்வூட் போற்றி தோட்டத்தில் ஓர் கலைக் குடும்பத்தில் பிறந்த பிரான்சிஸ் ஹெலனின் தந்தை சிறந்தநாடக ஆசிரியரும், கலைஞருமாவார். தனது தந்தையாரின் நாடகங்களில் அதிகம் ஈடுபாடு கொண்ட இவர் 1977 ம் ஆண்டு தனது தந்தை தயாரித்த 'வேண்டாம் அடிமை வாழ்வு" என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக மிக சிறு வயதில் நடித்ததன் ஊடாக இவரின் கலை வாழ்க்கை தொடங்கிற்று. 1970,1980 களில் கத்தோலிக்க வாலிபர் இயக்கம், மறுமலர்ச்சி மன்றம் போன்றவற்றில் தனது தந்தை மேற்கொண்ட கலைப்படைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

பெ.விஜயகோபால்

சாமிமலை கவரவில தமிழ் மகா வித்தியாலயத்திலே ஆசிரியராக கடமைபுரியும்.பெ.விஜயகோபால் 1997-07-01 ல் வழங்கப்பட்ட தோட்டபுற பாடசாலை ஆசிரியர்களுக்கான நியமத்திலே தெய்வகந்த தமிழ் வித்தியாலயத்திற்கு முதன் முதல் நியமனம் பெற்றார்.சாமிமலை மாநெலி தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் 1975-07-31 ஆந் திகதி திரு.பெரியசாமி திருமதி.புஸ்பவதி தம்பதியனருக்கு மகளாகப் பிறந்தார் இளமை காலத்திலேயே பஜனைப் பாடல்களை பாடும் திறன் பெற்றவர்.

வே.இராமர்

சாமிமலை அவரவத்தை தோட்டத்தை சேர்ந்த வேலாயுதம் நல்லம்மா அவர்களின் மூத்த புதல்வரான வே.இராமர் ஆரம்ப கல்வியை தெய்வகந்தை தமிழ் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை மஸ்கெலியா சென் ஜோசப் தமிழ் மகா வித்தியாலயத்திலும் மேற்கொண்டவர். மேலும் இளம் கலைமானி பட்டத்தையும் முதுகலைமாணி (தமிழ்) பட்டத்தையும் பேராதனைப் பல்கலைகழகத்திலும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை இலங்கை திறந்த பல்கலைகழகத்திலும் பூர்த்தி செய்தவர்.

என்.சாம்பசிவமூர்த்தி

நோர்வூட் தென்மதுரையை பிறப்பிடமாகவும், ஹட்டன் ஹில்வூட் கிராமத்தை வசிப்பிடமாகவும் கொண்டவராகிய சாம்பசிவமூர்த்தி;. தனது ஆரம்பகல்வியை பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்திலும், உயர் கல்வியை ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் பயின்றார். 1991ம் ஆண்டு ஆசிரியராக சேவையில் உள்வாங்கப்பட்டார்.சிறு வயது முதலே மேடைகளில் பாடத் தொடங்கிய ,வர் கலைத்துறையில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுபவர்.

எஸ்.பிரேம்குமார்

மலையக மக்கள் கலை இலக்கிய செயற்பாட்டில் அதிக ஈடுபாடை கொண்ட சோலை சுப்ரமணியம் பிரேம்;குமார் மஸ்கெலியா கிராப்பு தோட்டத்தை பிறப்பிடமாகவும், பொகவந்தலாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாப்பாத்தி ஆகியோரின் மகனுமாவார். சென்மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் தரம் ஐந்து புலமை சித்தியின் பெயரால் கொழும்பு இந்து கல்லூரியில் இடைநிலைக்கல்வியையும், தொடர்ந்தார். 1995 மீண்டும் பொகவந்தலாவை சென்மேரிஸ் மத்திய கல்லூரியில் தமது கல்வியை தொடர்ந்தார். உயர் கல்வியை பொகவந்தலாவை ஹொலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்தார். தனது மாணவப் பருவத்திலேயே கலை இலக்கிய அரங்கவியல் செயற்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

எம்.தியாகராஜா

2010ம் வருடம் இ,ந்தியாவில் இடம்பெறவிருக்கும் உலக செம்மொழி மாநாட்டில் ,லங்கை சார்பாக மலையக மக்கள் 'கலை அரங்கு" வழங்கும் காமன் கூத்து நிகழ்வில் பங்கேற்கும் மற்றுமொறு கலைஞர் மா. தியாகராஜா ஆவார் இவர் நோர்வூட் போற்றி தோட்டத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது பெற்றோர் மாரி, செல்லத்தாயி ஆகியோர் தோட்டத் தொழிலாளர்களாவர்.

போல்பெரேரா

பொயிஸ்டன் டிக்கோயா தோட்டத்தைச் சேர்ந்த சின்னையா ஜெபமாலை அவர்களின் புதல்வரான.போல் பெரேரா ஒரு தோட்ட தொழிலாளியாவார். இவர் வாழும் ஊரில் ஐம்பது வருடத்திற்கு மேலாக காமன் கூத்து நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழலில் வளர்ந்த ,வர் தனது பாடசாலைக் காலத்தில்பல நாடகங்களில் நடித்தும் இசை கருவிகள் இசைப்பதையும் தன் திறமையால் மெருகூட்டிக் கொண்டவர்.

திருமதி .பிரேம்குமார் ஜெயநந்தினி

பலாங்கொடை சீ.சீ தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் தமிழ் வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியையும் கற்றார். பாடசாலை காலத்தில் கலை இலக்கிய துறையில் அதிக நாட்டம் கொண்ட இவர் சிறுகதை ஆக்கம் போட்டியில் அகில இலங்கை ரீதியாக பரிசில்களை வென்றவர்.

ஸ்ரீநிவேதா

சிறு வயதிலேயே கலை ஆர்வம் மிக்க ஸ்ரீ நிவேதா ,ரவீந்திரன் வினோதினி தம்பதியினரின் மகளாவார். இவர் புளியாவத்தை நகரத்தை வசிப்பிடமாக கொண்டவர். தனது ஆரம்பக் கல்வியை புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியையும், உயர்நிலைக்கல்வியையும் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரியிலும் கற்று வருகின்றார்.

இவர்களுடன் உடையலங்காரத்தினை திருமதி வசந்தி ஹெலன் ,திருமதி கிறிஸ்டிலா இராமர் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.ஒப்பனையை செல்வி .பழனியாண்டி டலாதேவியும் மேற்கொள்ளவுள்ளனர்.
..

No comments:

Post a Comment