தமிழுக்கு அமுதென்று பேர், அந்ததமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !

Wednesday, February 3, 2010

காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் கோயில் .




500 வருடங்களுக்கு முன் காரேறு மூது¡ர் என்ற பெயர் வழக்கிலிருந்த போது ஸ்தாபிக்கப்பட்டது. இப்பெயர் திரிந்து காரைதீவாயிற்று. கதிர்காமம்செல்லும் யாத்திரிகர்கள் இக்கோயிலில் தங்கிச் செல்வது வழக்கம். கோயிலின் தலவிருட்சம் வயது முதிர்ந்த வேப்ப மரம். இப்பகுதியை அரசாண்ட வன்னிய மன்னன் நிலபுலன்களை பார்வையிட வந்த சமயம் அரசனின் யானை கீழே விழுந்து மயங்கி படுத்ததாகவும் அப்போது கோயில் மணி ஒலிக்க அங்கு வந்த ஏவலாளர்கள் கோயிலின் மகிமையை அரசனுக்கு எடுத்துச் சொன்னார்கள். கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த தேவந்தி என்ற பெண் விவரம் அறிந்து வேப்பமிலை அரைத்து குளிகைசெய்து யானைக்கு கொடுத்து தீர்த்தம் பருக்கியபின் யானை எழுந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரை கதையுண்டு.

அதற்கு கைமாறாக அரசன் ஆலயம் அமைத்து கொடுத்தானாம். அரசனுடைய இரு மனைவியர்களில் ஒருவாரான சிறிய பூற்கோதைக்கு இழந்த கண்பார்வை அம்மனை வணங்கியதால் கிட்டியதாகவும் கதையுண்டு. ஆலயம் தொடர்பான வழக்குலை என்னும் என்ற ஏடு ஒன்றுண்டு. வருடா வருடம் 7 நாட்கள் நடக்கும் உற்சவத்தில் இது தினமும் பாடப்பெற்று நிறைவு பெறும். 1976 ல் கோயில் புனருத்தாரணம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

No comments:

Post a Comment